அதேபோல, நாங்கள் 2005ம் ஆண்டு இந்தியாவிற்கு சென்றபோது, இந்திய மக்கள் எங்களை மிகுந்த அன்புடன் வரவேற்று உபசரித்தனர். நாங்கள் வெளியில் சென்றபோது எந்த கடைகளிலும் எங்களிடம் காசு வாங்கவில்லை. அந்த சுற்றுப்பயணத்தின்போது, கொல்கத்தாவில் உள்ள கங்குலியின் ரெஸ்டாரண்ட்டை நானும் சச்சினும் இணைந்துதான் தொடங்கிவைத்தோம். கங்குலி அளித்த உணவை நான் சாப்பிட்டிருக்கிறேன். அப்படியிருக்கையில், கனேரியாவுடன் உணவை பகிராமல் எப்படி இருந்திருக்க முடியும். எனவே எனது கேப்டன்சியில் அப்படியான பாகுபாடு காட்டப்பட்டிருக்க வாய்ப்பேயில்லை என்று முற்றிலுமாக மறுத்திருக்கிறார் இன்சமாம்.