Loading...
பரந்தன் பகுதியில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு ஒருவர் பலியாகியுள்ளார். நேற்று (1) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இளைஞர் ஒருவர் மீது கும்பலொன்று தாக்கி, போத்தலால் குத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
28 வயதுடைய கார்த்தி என அழைக்கப்படும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Loading...
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம். தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த குற்ற செயலில் நான்கு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
Loading...








































