முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் தனியார் ஒருவரின் தென்னங்காணி ஒன்றில் உள்ள கிணற்றில் இருந்து இளம் குடும்ப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பூதன்வயல் கிராமத்தில் வசித்துவந்த யோகராசா றாஜினி (36) என்ற இளம் குடும்ப பெண்ணே, நேற்று (8) சடலமாக மீட்கப்பட்டார்.
இவரை, கடந்த 04 ஆம் திகதியில் இருந்து காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இவர் ஏற்கனவே திருமணமாகி, 22, 16 வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், கணவரை பிரிந்து இன்னொரு ஆணுடன் குடும்பம் நடத்தி வந்தமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முதற்கணவர் தட்டையர்மலை முத்துஐயன்கட்டில் வசித்துவந்துள்ளார். றாஜினி கடந்த இரண்டு ஆண்டுகளாக கிளிநொச்சியினை சேர்ந்த ஆண் ஒருவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
சொந்த வீடு இல்லாத நிலையில் பற்றையால் சூழப்பட்ட காணி ஒன்றில் ஒரு சிறிய குடிலிலேயே இவர்கள் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.
உயிரிழந்தவரின் கைப்பை ஒன்று தென்னங்காணிக்குள் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து சடலம் கிணற்றினுள் இருப்பது இனம் காணப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்டவைத்தியர் பி.நிலுசன், தடயவியல் பொலிஸார் ஆகியோர் முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய 33 வயதுடைய கிளிநொச்சியினை சேர்ந்த ஆண் ஒருவரை முள்ளியவளை பொலிஸார் விசாரணைக்காக அழைத்துசென்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னடுத்துள்ளனர்








































