Loading...
வெவ்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் ஆறுகளில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி சிறிபாகம, கொஸ்லந்த மற்றும் செவனகல பிரதேசங்களில் ஆறுகளில் நீராடச் சென்ற 16, 22, 40 ஆகிய வயதுகளையுடைய மூவரே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
Loading...
அதேவேளை 10, 54 ஆகிய வயதுகளையுடைய இருவர் நீரில் மூழ்கிக் காணாமல்போயுள்ளதாகவும், அவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Loading...








































