Loading...
கொழும்பு புறநகரில் நோயாளர் காவு வண்டி மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சற்று பதற்றமான நிலை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை நடந்துள்ளதாக பாணந்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொழும்பு புறநகர்ப் பகுதியான பாணந்துறை ஆரம்ப வைத்தியசாலைக்கு அருகிலேயே நோயாளர் காவு வண்டி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Loading...
இனந்தெரியாத நான்கு நபர்களே வண்டி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இருப்பினும் துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன் சம்பவம் குறித்து பாணந்துறை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
Loading...








































