கடந்த 2019-ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஒத்த செருப்பு’.
இப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது.
இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். கடந்த 2019-ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
பார்த்திபன் மட்டுமே தனி கதாபாத்திரமாக நடித்திருந்த இப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தை பார்த்திபனே தன் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார். இந்நிலையில், ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தை மலையாள நடிகர் மோகன் லாலை வைத்து ரீமேக் செய்ய முயற்சித்ததாக பார்த்திபன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “‘Alone'(Malayalam) இன்னும் பார்க்கவில்லை.actual-ஆ ஒத்த செருப்பை லால் சாரை வைச்சுதான் remake செய்யனும்னு ஆசைபட்டேன் முயற்சியும் பண்ணேன். எது நடந்ததோ… அது நன்றாகவே நடந்திருக்கிறது. மகிழ்ச்சி” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.