ATM இல் வைக்கப்பட்டிடிருந்த 12 லட்சம் ரூபாயை எலி கடித்துக் குதறி நாசமாக்கியுள்ளது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் எஸ்.பி.ஐ ATM இல் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ATM இல் 12 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. இந்த ATM இயந்திரம் பழுதானதால், அதிலிருந்த பணம் அதனுள்ளேயே இருந்துள்ளது.
மேலும் இந்த இயந்திரம் சீர் செய்யப்படாமல் பல மாதங்களாக அப்படியே இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று ATMயை சீர் செய்ய அதிகாரிகள் மெஷினை திறந்துள்ளர். திறந்து பார்த்தவர்களுக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால் அதிலிருந்த பணம் அனைத்தையும் எலி கடித்து குதறி நாசமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுனின்றது.
ATM இல் மொத்தமாக 12 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. இதனை முழுமையாக எலி கடித்து குதறியுள்ளது.
தற்போது எலி மீது எப்படி புகார் கொடுப்பது என்று வங்கி அதிகாரிகள் குழம்பிப் போயுள்ளனர்.