கடந்து போனவற்றைத் திரும்பிப்பார்க்காது நாட்டின் எதிர்காலம் சிறக்க முன்னோக்கி நகர்வோம் என்கிறார் கலாநிதி விக்கிர மபாகு கருணாரத்ன.
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்தமை பொதுமக்களுக்கு நாடாளுமன்றத்தினூடாக கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது.
அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த ஜனநாயக நடைமுறை தொடரவேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாக அமைகிறது.
இன்னொரு விடயம் குறித்தும் கவனம் செலுத்தப்படவேண்டியுள்ளது. அழிவுப் பாதையில் சென்று கொண்டிருந்த நாட்டை மீட்டெடுத்தவருக்குப் பின்னால் நாட்டிலுள்ள தொழிலாளர்கள், தொழில்சார் ஊழியர்கள் மற்றும் தமிழ்பேசும் மக்களும் பக்க பலமாக இருந்தனர்.
நாட்டு மக்களுக்கு ஏமாற்றம் தந்த அவர்களது எதிர்பார்ப்பு
தென்னாபிரிக்காவின் மறைந்த மாபெரும் தலைவர் நெல்சன் மண்டலோவின் வழியிலேயே இலங்கை செல்ல வேண்டும் என்பதே இந்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.
ரணில் விக்கிரமசிங்க அந்தவேளையில் சரியானதையே செய்தார். அரச தலைவர் தேர்தலின்போது, தன்னை எவருமே தோற்கடிக்க முடியாது என்ற இறுமாப்புடன் வலம்வந்த, சர்வாதிகாரிபோலச் செயலாற்றிய மகிந்த ராஜபக்சவை வீழ்த்து வதற்கு, சரியானதொரு தெரிவாக மைத்திரிபால சிறிசேனவை அரச தலைவர் தேர்தலுக்கான பொது வேட்பாளராக பலரின் பலமான எதிர்ப்புக்கு மத்தியில்தான் களமிறங்கி தேர்தலில் வெற்றிபெற வைத்தமையும், அதற்காக ரணில் மேற்கொண்ட முடிவும் சரியானதே என சகலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்க அரசதலைவர் பதவிக்குப் பொருத்தமான ஒரு பொதுவேட்பாளரை தெரிவு செய்து அவரை வெற்றியும் பெறச் செய்தமை பன்னாட்டு சமூகத்தின் பார்வையை ரணில் விக்கிர மசிங்கவை நோக்கித் திரும்ப வைத்துள்ளது.
புத்திசாலிகள், மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலம் மிகவும் மோசமான ஒன்று என ஏற்றுக்கொண்டுள்ளனர்.
குடும்ப ஆட்சியொன்றே மகிந்தவின் காலத்தில் இலங்கையில் இடம்பெற்றது.
நாட்டில் மரியாதையான, அச்சமற்ற சூழல் நிலவவில்லை, மனித உரிமைகள் குழி தோண்டிப் புதைக்கப்பட்டிருந்தன. அரசின் சீரற்ற, ஒழுக்கக் கேடான நிர்வாகத்தினால், ராஜபக்ச குடும்பத்தினர் நாட்டை இருண்ட யுகத்துக்கே இட்டுச் சென்றிருந்தனர்.
ராஜபக்ச குடும்பத்தினரால் படுகுழியில் தள்ளப்பட்டிருந்த இலங்கை அரசின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவே மைத்திரி, ரணில் கூட்டணியில் நல்லாட்சி என்ற பெயரில் கூட்டரசு உருவாக்கப்பட்டது. இப்போது தலைமை அமைச்சர் கூறுவது உண்மைதான்.
அது மகிந்தவினால் பெறப்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட கடன் சுமையைத்தான் தற்போதைய அரசு மீளச் செலுத்திவருகிறது என்பதுதான்.
நாட்டின் பொருளாதார நிலை வீழ்ச்சி அரச தலைவர் தேர்தலை துரிதமாக்கியது
சகல அதிகாரங்களையுமே தன்னிடத்தில் குவித்துக் கொண்டது மட்டுமல்லாது மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளிலும்கூட தனது அதிகாரத்தை, ஆதிக்கத்தைச் செலுத்திவந்த மகிந்த ராஜபக்சவை பதவிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு வருடங்கள் இருந்த நிலையிலேயே அரச தலைவர் தேர்தலை நடத்துமாறு ஆலோசகர்கள் வற்புறுத்தி வந்திருந்தனர்.
நாட்டின் பொருளாதாரம் சீராக இருந்திருந்தால், அரச தலைவர் தேர்தலை பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே நடத்த வேண்டிய அவசியம் மகிந்தவுக்கு ஏற்பட்டிராது. 2015இல் நாடு என்ன நிலையில் இருந்தது என்பதனை எடுத்துக்காட்ட இதுவே நல்லதொரு உதாரணமாகும்.
மைத்திரிபால சிறிசேன நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டவும், சம உரிமையுடன், சமாதானமாக, சகல இனமக்களும் வாழவும் வெகு அவதானமாக பொது வேட்பாளராக சரியான நேரத்தில் அரசதலைவர் பதவிக்குக் களமிறங்கியிருந்தார்.
ஆனால் இன்று மைத்திரிபால சிறிசேன, தாம் முன்னர் பொதுச்செயலாளராகப் பதவி வகித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்க வேண்டிய அழுத்தத்திற்குள்ளாகியுள்ளார். ராஜபக்சவையும், கூட்டு எதிரணியினரையும் கட்டுப்படுத்த இயலாத பலவீனமான நிலையில்தான் மைத்திரி தற்போதுள்ளார்.
மகிந்த குழுவினரின் கைப்பொம்மையாகச் செயல்படும் மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளினால் பாதிக்கப்படுவது ஐக்கிய தேசியக் கட்சிதான். அரசின் நிர்வா கத்தில், அரச நிறுவனங்கள் போன்றவற்றின் நியமனங்க ளில் அரச தலைவர் எடுக்கும் முடிவுகள் எவ்வளவு தவறானவை என்பதைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. அரச தலைவர் இந்த நியமனங்களின்போது தலைமை அமைச்சருடன் கலந்தாலோசிப்பதில்லை என்பது புலப்படுகின்றது.
இலஞ்ச ஊழல் ஆணையாளர் டில்ருக்சி டயஸ் விக்கிரமசிங்கவை மிக அநாகரிகமான முறையில் பதவி நீக்கம் செய்த அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, அவருடைய சிறிலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இயலாத நிலையி லுள்ளார்.
அரச தலைவர் சகல அதிகாரங்களையும் கொண்டவராக இருந்த போதிலும் , அரசில் இடம்பெறும் சகல தவறுகளுக்கும் தலைமை அமைச்சரும் அமைச்சரவையுமே பொறுப்பேற்கும் நிலை காணப்பட்டது. ஆனால் அதிகாரமுள்ள அரச தலைவர் இவர்களை காப்பாற்ற முன்வரவில்லை.
ஆரம்பகாலங்களில் தலைமை அமைச்சரும் அவருடைய ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் ஊடகங்களுக்கு பெரிய அளவில் முன்னுரிமை வழங்கவில்லை. ஆனால் தொடர்ந்து வந்த காலங்களில் ரணில் மற்றும் அவரது கட்சியினர் தங்கள் போக்கை மாற்றிக்கொண்டனர். கட்டுப்பாட்டுடன் இருப்பதுதான் தொடர்ந்தும் அவர்கள் அரசில் நீடிப்பதற்கு வாய்ப்பாக இருக்கும் என அவர்கள் எண்ணியிருந்தாலும் அது நடக்காமலும் போகலாம்.
ஒரு பொழுது போக்குக்காக, அரசியல் பிரமுகர்களை தாக்கிப் பேசுவதுதான் பொதுவாக அரசியல் கலாசாரம். இது முன்னைய காலத்தில் அரசர்கள் இலங்கையை ஆண்ட கால கட்டத்திலும் சரி, அதன் பின்னர் ஐரோப்பியர்கள் இலங்கையை ஆட்சி புரிந்த காலத்திலும்கூட இதுவேதான் வழமையாக இருந்துள்ளது. அதே நிலைதான் இன்றுவரை தொடர்கிறது.
மகிந்தவுக்கு வௌிநாட்டு வங்கியில் பெருந்தொகை நிதி வைப்பில்
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியைத்தான் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மிகப்பெரிய ஊழல் மோசடி என நினைக்கிறார். இந்தத்தொகை 80மில்லியன் டொலர்களாகும். இந்த பணம் ஒழித்து வைக்கப்படவில்லை. அவசியம் ஏற்படின் இந்தப் பணத்தை மீண்டும் வசூழித்துக்கொள்ள இயலும் இதனை ஒரு அரசியல் நடவடிக்கைகளின் அங்கமாக கருதலாம்.
அதேவளை ஒரு கட்டுப்பாடில்லாத சகலவழிகளிலும் பணத்தை சுரண்டிய ராஜபக்ச ஒரு வௌிநாட்டு வங்கியில் 600மில்லியன் டொலர்களை வைப்பிலிட்டு வைத்திருப்பதனூடாக ராஜபக்ச அரசில் எந்த அளவுக்கு இலஞ்ச ஊழல் மலிந்திருந்தது என்பதனை உணரமுடியும்.
அதேவேளை இந்த நாட்டின் ஊடகங்கள், உண்மையில் இந்த நாட்டின் ஐனநாயகத்தை காப்பாற்றுவதற்கு கடப்பாடு உடையவை. ஆனால் அவையோ நாட்டை மீண்டும் அழிவின் பாதைக்கே இருண்ட வாழ்க்கைக்கே, இட்டுச் செல்லும் நிலைமையை உருவாக்கும் போக்கில் செயற்படுகின்றன.
தற்போதும் இலங்கை ஒரு உறுதியற்ற இருண்ட தன்மையான நிலையை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறது. மைத்திரிதான் இந்த உறுதியற்ற நிலைக்குப் பின்புலத்தில் செயல்படுகிறார். எப்படியாவது தமது அரச தலைவர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மகிந்தவுக்கு எதிரானவர்களுடன் உறவைப் பேணமுயலுகிறார். ஒரு புதுப்பாதையை மைத்திரி அமைத்துக் கொண்டுள்ளார் போலத் தோன்றுகிறது. ஜனநாயகம் தொடர இன்னும் ஒரு கட்சியைத் தனக்குச் சார்பாக வைத்துக் கொண்டிருக்கிறார்.
பண்டார நாயக்கவின் சகாப்தத்தை மீண்டும் உருவாக்க எண்ணிய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் கனவு கலைந்து போய் மீண்டும் ஒரு சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுவாகி அதன் கடிவாளங்களை மகிந்த கையிலெடுக்கும் நிலமை உருவாகியது. நாடாளுமன்றில் கடைசியாக நிகழ்ந்த சம்பவம் பலரின் கண்களைத் திறந்து விட்டது. அது பொதுமக்களின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவாகக் காட்டியுள்ளது.
மகிந்தவின் அரசியல் என்பது இலங்கையின் சரித்திரத்தில் முடிந்துபோனதொரு அத்தியாயம். அது கவலையான துன்பமானதொரு இருண்டதொரு காலம். எவராலும் ஏற்றுக் கொள்ளமுடியாத ஒரு காலம். மகிந்தவின் ஆட்சிக் காலம்.
எந்தவொரு அரசியல் தலைவராளும் அந்த மோசமான அரசியலுக்கு உயிர்கொடுக்க இயலாது. ஆகவே பின்புறம் திரும்பிப் பார்க்க எண்ணாதீர்கள். ஒரு இனிமையான சுபீட்சமான எதிர்காலத்தை எதிர்பார்த்து முன் செல்லுங்கள்.