Loading...
கொழும்பு செய்திகள்:கல்கிஸ்ஸ மற்றும் வெலிக்கடை பிரதேசங்களில் செயற்படும் விபச்சார விடுதிகள் இரண்டு சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.
இதன்போது அங்கு பணியாற்றிய 12 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்திச் செல்லப்பட்ட இந்த விபச்சார விடுதிகள் தொடர்பில் நீதிமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
Loading...
நீதிமன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைக்கமைய வெலிக்கடை மற்றும் கல்கிசை பொலிஸார் இணைந்து இந்த சுற்றி வளைப்பை மேமற்கொண்டுள்ளனர்.
இந்த விபச்சார விடுதிகளை நடத்தி சென்ற பெண் முகாமையாளர் மற்றும் ஆண் முகாமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
Loading...