பாகிஸ்தான் அணி தலைவர் சவ்ராஸ் அகமதுவுடன், அவுஸ்திரேலிய வீரர் கிளென் மக்ஸ்வெல் கைகுலுக்க மறுத்துள்ளார்.
இந்த சம்பவம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிம்பாவேயில் முக்கோண டி20 தொடர் இடம்பெற்றது.
இந்த தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.
வெற்றியின் பின்னர் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் மக்ஸ்வெல் கை குலுக்கியுள்ளார். எனினும் பாக்கிஸ்தான் அணி தலைவர் கையை நீட்டியுள்ளார்.
இருந்த போதிலும் மக்ஸ்வெல் அதனை அலட்சியம் செய்துள்ளார். இந்த காட்சி தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன.
இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணி தலைவர், மக்ஸ்வெலுடன் வார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்டார்.
பக்கிஸ்தான் வெற்றி பெற்றவுடன் சவ்ராஸ் அகமது முதலில் மைதானத்திற்குள் ஓடியுள்ளார். இதன் போது மக்ஸ்வெல் மோதலில் ஈடுபட்டார்.
இந்த மோதலில் இருவரும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.