காலியில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா தடுமாறுகின்றது.
நேற்று முதல் இனிங்சை ஆரம்பித்த இலங்கை அணி வீரர்கள் 287 ஓட்டங்களை பெற்றனர். இதில் கருணா ரத்ன மாத்திரம் சிறப்பான ஆடி 158 ஒட்டங்களை குவித்தார்.
தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுககைள வீழ்த்தியிருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை தங்கள் முதலாவது இனிங்சை ஆரம்பித்த தென்னாபிரிக்கா அணி தடுமாறி வருகின்றது.
தென்னாபிரிக்கா அணியின் தலைவர் டுபிளிஸிஸ் மாத்திரமே அதிகப்படியாக 49 ஓட்டங்களை குவித்திருத்துள்ளார். அதற்கமைய தென்னாபிரிக்கா அணி 126 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
இலங்கை அணி சார்பில் தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்த நிலையில் இலங்கை தனது இரண்டாவது இனிங்சை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.