இங்கிலாந்து – இந்திய அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்துள்ளது.
இந்த போட்டி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று இடம்பெற்றது.
போட்டியில் டாஸ் வென்று துடுப்பெடுத்தாட இங்கிலாந்து அணி தீர்மானித்தது. இந்த போட்டியில் ஆரம்ப வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
ஜோ ரூட்டின் சதத்துடன் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 322 ஓட்டங்களை சேர்த்தது.
பின்னர் 323 ஓட்டங்களை துரத்த ஆரம்பித்த இந்திய அணியின் ஆரம்ப வீரர்களின் சொதப்பல் காரணமாக இந்திய அணி தோல்வியடைந்தது.
கோஹ்லி 46 ரய்னா 45 ஓட்டங்கள் எடுத்து வெளியேற 9 விக்கெட்டுகளை இழந்து, 50 ஓவரில் 236 ஓட்டங்களை மாத்திரமே இந்திய அணி குவித்து தோல்வியடைந்தது.
அதற்கமைய தற்போது இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று தொடர் சமநிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.