இந்திய அணியின் முன்னாள் தலைவர் மஹேந்திர சிங் தோனி வெகுவிரைவில் ஒரு நாள் கிரிக்கெட்டிற்கு விடைகொடுக்கவுள்ளார் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதுவரையில் 321 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள தோனி அண்மையில் 10000 ஓட்டங்களை கடந்தார்.
எப்படியிருப்பினும், இந்தியா – இங்கிலாந்து ஒரு நாள் போட்டியில் தோனி விளையாடிய விதத்தை இந்திய ஊடகங்கள் மற்றும் ரசிர்கள் விமர்சித்தனர்.
இரண்டாவது போட்டியில் 59 பந்துகளுக்கு முகம் கொடுத்த தோனி 37 ஓட்டங்கள் மாத்திரமே குவித்தார். மூன்றாவது போட்டியில் 66 பந்துகளில் 42 ஓட்டங்களை தோனி அடித்திருந்தார்.
அந்த இரண்டு போட்டியிலும் தோனியின் ஆட்டம் காரணமாக இந்திய அணியின் ஓட்ட வேகம் குறைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இடம்பெற்ற போட்டியின் பின்னர் தோனி நடுவரிடம் பந்தை கேட்டு வாங்கியுள்ளார். இது கமராவில் பதிவாகியுள்ளதுடன், அவர் விரைவில் ஒரு நாள் போட்டியில் இருந்து விடைபெறவுள்ளார் என கூறப்படுகின்றது.