கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இடம்பெற்று வருகின்றது.
இந்த போட்டியிலும் முதல் போட்டியை போன்று தென்னாபிரிக்கா அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது.
490 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு தென்னாபிரிக்கா அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது. அதற்கமைய நேற்றைய ஆட்ட நேர முடிவில் தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 338 ஓட்டங்களைப் பெற்றது. தென்னாபிரிக்கா அணியினால் 124 ஓட்டங்களுக்கு மாத்திரமே பெற முடிந்தது. இலங்கை அணி இ 3 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களுடன் ன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.
இந்த நிலையில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 275 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதன் போது ஆட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தது. அதற்கமைய தென்னாபிரிக்காவின் வெற்றி இலக்கு 490 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
குறித்த இலக்கை அடைய பதிலளித்தாட களமிறங்கிய தென்னாபிரிக்க அணியின் முதல் ஐந்து விக்கெட்களும் 113 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன. அதற்கமைய நேற்றைய ஆட்ட நேர முடிவில் தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களை பெற்றிருந்தது.