வெளிநாட்டு பெண்ணை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை அணி வீரர் குற்றச்சாட்டில் இருந்து தப்பியுள்ளார்.
சகலவகை போட்டிகளில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ள ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஸ்க குணதிலக தான் எவ்வித குற்ற செயல்களிலும் ஈடுப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டிவில் அமைந்துள்ள தனது ஹோட்டல் அறையில் பாலியல் வன்முறை சம்பவம் இடம்பெற்றதாக கூறப்பட்டது. இது தொடர்பிலேயே தனுஸ்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனுஸ்க குணதிலக தன் மீது குற்றமில்லை என தெரிவித்துள்ளார் என கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனால் அவர் குறித்து விசாரணைகளை தொடரப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அணிக்கான விதிமுறைகளை அவர் மீறியுள்ளார். இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை விசாரணைகளை மேற்கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.