இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கோஹ்லிக்கு மிகவும் தொந்தரவாக இருந்த இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரசித் முதல் டெஸ்ட் போட்டியில் அணிக்கு தேர்வாகியுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு தற்போது டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 1-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இதில் பங்கேற்கும் 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் போர்டு அறிவித்தது. இதில் ஒருநாள் தொடரில் கோஹ்லியை அவுட்டாகி திருப்பு முறை ஏற்படுத்திய அடில் ரஷித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து ரஷித் கூறுகையில், டெஸ்ட் தொடரில் என்னை தெரிவு செய்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
ஒருநாள் தொடர் முடிந்த பின்பு தேர்வு குழுவினர் என்னிடம் வந்து பேசினர். ஆனால் தெரிவு செய்யப்படமாட்டேன் என்று இருந்தேன். ஆனால் இந்த செய்தியை கேட்டவுடன் நம்பமுடியவில்லை.
என்னால் முடிந்த அளவு அணியின் வெற்றிக்கு போராடுவேன் என்று கூறியுள்ளார்.