இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு 6 ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை இந்த முடிவை எடுத்துள்ளது.
தனுஷ்க குணதிலக இலங்கை கிரிக்கெட் வீரர்களின் ஒழுக்க விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக குற்றம் சுமத்தி அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தனுஷ்க குணதிலக, தனது நண்பருடன் இணைந்து பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கடந்த வாரம் செய்தி வெளியாகியிருந்தது.
நோர்வே நாட்டு பெண் ஒருவர் இந்த முறைப்பாட்டினை செய்த நிலையில் தனுஷ்க குணதிலக்கவின் நண்பரை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தனுஷ்கவிடம் விசாரணை மேற்கொள்ளவில்லை, அவர் இந்த சம்பவத்திற்கு தொடர்புப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
எப்படியிருப்பினும் இலங்கை கிரிக்கெட் சபை அவருக்கு போட்டி தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.