விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய வருகின்றது.
ஒரு நாளை தொடரை இழந்த நிலையில் இந்திய அணி டெஸ்ட் தொடரிலும் சொதப்பி வருகின்றது.
நேற்று முன்தினம் நிறைவுக்கு வந்த 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்தது.
இந்த போட்டியில்இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் – இந்தியா தோல்வி அடைந்தது.
இது குறித்து கருத்து வெளியிட்ட இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி,
மைதானத்தில் விளையாடிய ஆட்டத்தை நினைத்து எங்களால் எந்த வகையிலும் பெருமைப்பட முடியாது. இறுதியாக நாங்கள் விளையாடி 5 டெஸ்ட் போட்டிகளை பார்க்கும் போது இதில் மிகவும் மோசமாக தோல்வியடைந்தோம்.
எங்கள் அணி மற்றும் நான் விளையாடிய முறையை பார்த்தால் தோல்விக்கு தகுதியான அணியாக தான் காணப்பட்டது.
இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் ஆடுகளம் மற்றும் வானிலையை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டனர்.
அணியில் வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம். அப்படி தான் நான் நினைக்கிறேன். என்னுடைய முதுகுவலி பற்றி கவலைப்பட தேவையில்லை. அடுத்த போட்டிக்கு 5 நாட்கள் இடைவெளி உள்ளது. அதற்குள் அது சரியாகிவிடும.. என அவர் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் இந்திய அணியின் தொடர் தோல்வி காரணமாக இந்திய அணி ரசிகர்கள் கடும் கோபத்தில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.