இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணி படுதோல்வியடைந்துள்ளது.
இதனால் இந்திய அணி பலரால் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியை – பாகிஸ்தான் அணி தலைவர் கிண்டல் செய்யும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்திய அணியை விட நாங்கள் சிறப்பாக தயாரானதாகியுள்ளதாக பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்ப்ராஸ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து மண்ணில் படுகேவலமாக தோல்வியை சந்தித்து வரும் இந்திய அணியை விட தாம் சிறந்த முறையில் விளையாடியதாக பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்ப்ராஜ் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அணி இரண்டு முறை இங்கிலாந்துக்கு சுற்றுப்பயண்ம் செய்துள்ளது. குறித்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், பாகிஸ்தான் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
எந்த ஆசிய அணி இங்கிலாந்து சென்றாலும் அங்கு தடுமாறும். ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் 25 நாட்களுக்கு முன்பே இங்கிலாந்து சென்றது தான் காரணம்.
அந்த வகையில் பார்த்தால் இந்திய அணியை விடவும் பாகிஸ்தான் பரவாயில்லை என தெரிவித்துள்ளார்.