இங்கிலாந்து – இந்தியா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சற்று முன்னர் ஆரம்பித்தது.
இந்த போட்யிலும் இந்திய அணி நாணயசுழற்சியில் தோல்வியடைந்துள்ளது. அதற்கமைய நாணயசுழற்சியில் வெற்றி பெற்றஇங்கிலாந்து பந்து வீச முடிவு செய்துள்ளது.
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி பின்னடைலை சந்தித்துள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மோசமான ஆட்டத்தால் தோல்வியடைந்தது. இதனால் முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில் இன்று மூன்றாவது போட்டி தொடங்கியுள்ளது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. அதன்படி இந்திய முதலில் களமிறங்கி 17 ஓட்டங்களுடன் இந்திய அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.
கடந்த போட்டியின் தோல்விக்கு நாணயசுழற்சி முக்கிய காரணமாக கூறப்பட்டது. கடந்த போட்டியிலும் இந்திய அணி நாணயசுழற்சியில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.