ஆசிய கிண்ண போட்டிகளில் இந்த மாதம் இடம்பெறவுள்ளது.
இந்த தொடரில் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவுக்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அணியில் அவர் இடம்பெறுவார் என தெரிவுக்குழுவின் தலைவர் கிரஹாம் லபரோய் தெரிவித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் 50 ஓவர் போட்டிகளில் மலிங்க விளையாட தயாராகயிருக்கவில்லை. இதன் காரணமாக நாங்கள் வேறு சில வேகப்பந்து வீச்சாளர்களில் கவனம் செலுத்தினோம்.
2019ஆம் ஆண்டு உலககிண்ணப்போட்டிகளில் விளையாடக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்களில் நாங்கள் அதிக கவனம் செலுத்துகின்றோம். இதனால் மலிங்கவிற்கு ஓய்வளித்தோம்.
தற்போது உள்ளுர் போட்டிகள் இடம்பெற்று வருகின்றது. அவரது உடல்தகுதி நல்ல நிலையில் உள்ளது. இதனால் நாங்கள் அவரை ஆசிய கிண்ண அணியில் இணைத்துக்கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்