100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டி ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு இங்கிலாந்து அனுமதி கேட்டுள்ளது.
எனினும் இந்த திட்டத்திற்கு இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோஹ்லி எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே இருபதுக்கு 20 போட்டிகளில் ஒரு ஓவருக்கு ஆறு பந்துகள் வீதம் 120 பந்துகள் வீசப்படுகிறது.
புதிதாக அறிமுகப்படுத்த திட்டமிடும் 100 பந்துகள் கொண்ட போட்டிகளில் கடைசி ஓவரை முழுமையான ஓவராக வீச முடியாது நிலை காணப்படும். ஒரு ஓவருக்கு 6 பந்துகள் என்றால் 16.4 ஓவர்களோடு போட்டி முடிவுக்கு வந்துவிடும்.
இவ்வாறான விடயங்கள் வியாபார நோக்கங்கள் கொண்டவை எனவும், இவை கிரிக்கெட் விளையாட்டின் உண்மையான தரத்தை குறைப்பதாக விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமாக கிரிக்கெட் விளையாட்டினை மாற்றி பணம் சம்பாதிக்க நினைக்கும் இந்த முயற்சி தன்னை கடுமையான பாதிப்பதாக விராட் குறிப்பிட்டுள்ளார்.
இது தன்னை காயப்படுத்துகிறது. லீக் போட்டிகளை தான் ஏற்று கொள்வதாகவும், எனினும் சோதனை முயற்சிகளை தான் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.