சிறிது நாட்களுக்கு முன் காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தகராறு செய்கிறார் என்று நிலானி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் அதைத் தொடர்ந்து புகாரின் பேரில் மயிலாப்பூர் பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சென்னை கே.கே.நகர் ராஜா மன்னார் சாலையில் காந்தி லலித்குமார் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இந்த சூழ்நிலையில், காந்தி லலித்குமார் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் நிலானியுடன் இருந்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டிருந்தார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.
மேலும் தற்கொலைக்கு முன் அவர்கள் செய்த டப்ஸ்மேஷ் காணொளி இணையத்தில் இன்று வரை பரவிவருகிறது.