கண்டியில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் கல்லூரி ஒன்றில் உள்ள மாணவர் ஒருவர் சிலமணித்தியாலங்களுக்கு கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (25) இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த மாணவன் இந்த வருடம் க.பொ.த சாதாரணத் தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவன் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுதி நேர வகுப்பிற்கு செல்லும் வழியிலேயே இனந்தெரியாத குழுவினர் கருப்பு வேனில் வருகைத் தந்து குறித்த மாணவனை கடத்திச் சென்று தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் என கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்,காதல் விவகாரம் காரணமாகவே குறித்த மாணவன் கடத்திச் செல்லப்பட்டுதாக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கண்டியில் பாடசாலை மாணவர் ஒருவரை நகர மத்தியில் வைத்து இளைஞர் குழுவொன்று தாக்கிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.