ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய மற்றும் சஜித் பிரேமதாசவின் வாக்குகளை புறக்கணிப்போம் என தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
978வது நாளாக காணாமல் போன உறவினர்களால் சுழற்சிமுறை போராட்டம் இடம்பெறும் கொட்டகைக்கு முன்பாக இவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது அமெரிக்க ஐரோப்பிய கொடிகளை தாங்கியிருந்ததுடன், தமிழர்கள் போர்க்குற்றவாளியை விரும்பினால், வெள்ளைவான் வேண்டும் என்றால், துரோகிகள் டக்ளஸ் கருணாவை விரும்பினால் கோத்தபாய ராஜபக்சவிற்கு வாக்களியுங்கள், தமிழ் தாயகத்தில் புத்தமும் சிங்கள குடியேற்றத்தையும், சிங்கள எக்கிய ராஜ்ஜிய என்று கூறப்படும் ஒற்றையாட்சியையும் விரும்பினால் சஜித் பிரேமதாசவிற்கு
வாக்களியுங்கள் போன்ற பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.