மட்டக்களப்பு முகத்துவாரம் வெட்டப்பட்டு, மழை நீர் கடலுடன் கலக்க விடப்பட்டுள்ளது.
நேற்று (2) முகத்துவாரம் வெட்டப்பட்டது. இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் அதிகாரிகள் முகத்துவாரத்தை வெட்டி, வெள்ளநீரை வெளியேற்றினர்.
மட்டக்களப்பில் கடந்தவாரம் பெய்த கனமழையினால் வாவியில் நீர் மட்டம் அதிகரித்து, விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு அழிவடையும் அபாயம் ஏற்பட்டதாக கமக்காரர் அமைப்புக்கள் தெரிவித்திருந்தன. இதையடுத்து, மாவட்ட அரசாங் அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் அனுமதியுடன் முகத்துவாரம் வெட்டப்பட்டது.
அரச அதிபர், பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியலாளர் எஸ்.சசிநந்தன், மீன்பிடி திணைகள பிரதிநிகள் பிரசன்னத்துடன் முகத்துவாரம் வெட்டப்பட்டது. வழக்கம் போல, விவசாயிகள் இதற்கு ஆதரவு தெரிவிக்க, மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
.