ஜனாதிபதி மேற்கொள்ளும் தீர்மானங்களினால் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மீண்டும் தாய் நாட்டில் வாழ்வதற்கு பொருத்தமான சூழ்நிலை உருவாகும் என்று தாம் நம்பிக்கை கொள்வதாக லண்டனில் உள்ள இலங்கையரின் ஒன்றுமைக்கான அமைப்பாளர் அனுர மெதகெதர தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் நாம் மக்களுக்கு கூறும் செய்தி என்னவெனில் இது சிறந்த சந்தர்ப்பமாகும். ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்த நீங்கள் காணும் ஜனாதிபதி நாட்டின் நலனுக்காக எவ்வாறான தீர்மானங்களை மேற்கொள்வார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
ஜனாதிபதி மேற்கொள்ளும் தீர்மானம் பெரும்பாலும் நாட்டுக்கு நன்மையாகவே அமையும். இந்த நலமான தீர்மானங்களுடன் வெளிநாட்டில் இருக்கும் நாங்கள் மீண்டும் இலங்கையில் வாழ முடியும் என்ற நம்பிக்கை எமக்கு ஏற்படும் என்று நினைக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மகாநாட்டில் அவர் உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இத்தாலியில் உள்ள இலங்கையர் அமைப்பின் இணைபாளர் ரணில் பிரஷாத் வீரசிங்க கருத்து தெரிவிக்கையில், நாம் தாய் நாட்டுக்கு வருகை தந்து பெருமை மிக்க தலைவரை ஜனாதிபதி ஆசனத்தில் அமர்த்திய பின்னர் நாம் பெருமையுடன் நாட்டில் இருந்து திரும்புகின்றோம்.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததைப் போன்று நாட்டை கடன் சுமையில் இருந்து மீட்டு அபிவிருத்தி செய்து இலங்கையர்களை அபிமானம் மிக்க மக்களாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமரும் கட்டியெழுப்புவார்கள் என்று நாம் நம்புகின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.