மன்னார் மாவட்டத்தில் டெங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிகபட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் மத்தியில் விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை இன்று விழிர்ப்புணர்வு துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் , உங்களுடைய கிராமங்களில் டெங்கு குருதிப்பெருக்கு நோய் மீண்டும் தீவிரமாக பரவி வருகின்றது.
வீடுகள், உள்ளிட்ட பொது இடங்களில் டெங்கு நுளம்பு பெருகும் மிக முக்கியமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நீர் சேமித்து வைக்கும் தொட்டி, மலசல கூட பாவனைக்கு நீர் சேமித்து வைக்கும் தொட்டி அல்லது வாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
நீர் சேகரிக்கும் பாத்திரம் மற்றும் நில மட்டத்திற்கு கீழ் உள்ள நீர்த்தாங்கிகளில் நுளம்புகள் உள்ளே செல்லாத வகையில் மூடியினால் மூடி வைக்க வேண்டும்.
மேலும் அகற்ற முடியாத நீர் தேங்கும் பகுதிகளில் கப்பீஸ் போன்ற மீன்களை வளர்ப்பதன் மூலம் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த முடியும்.
டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகமாக காணப்படும் நேரங்களான காலையிலும்,மாலையிலும் 5 மணி முதல் 8 மணி வரையுமான காலப்பகுதியில் நுளம்பு கடித்தலில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.