பேஸ்புக் காதலில் ஏமாந்த யுவதியிடம் பாலியல் இலஞ்சம் கோரினார் என குற்றம்சாட்டப்பட்டுள்ள நுகேகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பேஸ்புக்கில் அறிமுகமான இளைஞன் ஒருவரின் வலையில் யுவதியொருவர் சிக்கியுள்ளார். சாதாரணமாக கடலை போட ஆரம்பித்து, பின்னர் இளைஞன் விரித்த காதல் வலையில் சிக்கிய யுவதி, பல இலட்சம் ரூபாவை இழந்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்டு, பேஸ்புக் கணக்கை இளைஞன் நிறுத்திய பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை யுவதி தெரிந்து கொண்டார்.
இளைஞன் பற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்திராத நிலையில், நுகேகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
இதன்பின்னர், யுவதியை அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பேசி வந்துள்ளார். அவரது முறைப்பாடு தொடர்பாக நடவடிக்கையெடுத்து, பணத்தை பெற்றுத்தருவதெனில் அதற்கு பாலியல் இலஞ்சம் கோரியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸ் உயரதிகாரிகளிடம் யுவதி முறைப்பாடு செய்தார்.
இதனடிப்படையில் நுகேகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டு, சிறப்பு விசாரணை நடந்து வருகிறது.