வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் மீது வாள்வெட்டு குழுவொன்று தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. இதில், மஸ்தான் எம்.பியின் பாதுகாப்பு அதிகாரி கையில் காயமடைந்துள்ளார்.
நேற்று (29) இரவு இந்த சம்பவம் நடந்தது.
தாக்கு வவுனியா பாவற்குளம் பகுதியில் மக்கள் சந்திப்புக்களை நேற்று நடத்தினார். சந்திப்பின் பின்னர், வவுனியாவிற்கு திரும்பும் வழியில், பாவற்குளம் பகுதியில் ஆதரவாளர் ஒருவரை வீட்டில் இறக்குவதற்காக மஸ்தான் எம்.பியும் சென்றார்.
இதன்போது அப்பகுதியில் நின்ற சிலர் வாள்களால் மஸ்தான் எம்.பியை தாக்க முயற்சித்துள்ளனா்.
உடனடியாக சுதாகரித்துக்கொண்ட பாதுகாவலர்கள், தாக்குதல் முயற்சியை தடுக்க முற்பட்ட போது பாதுகாவலரின் கைப்பகுதியில் காயமேற்பட்டுள்ளது.
தாக்குதலை நடத்திய குழுவினர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
காயமடைந்த பாதுகாப்பு அதிகாரி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிசார், இராணுவத்தினர் அங்கு தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.