கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கு அருகில் பாரியளவில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வரும் நிலையில் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இன்று(13) திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இரணைமடுவின் வான் நீர் பாய்ந்தோடும் பகுதியான கரடியாறு, கோரமோட்டை பகுதியின் ஆற்றுப்படுகையில் தொடர்ச்சியாக பாரியளவில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது. இதனால் குறித்த பிரதேசத்தின் ஆற்றுப்படுகையின் கரையோரங்களில் உள்ள மருதமரங்கள் உள்ளிட்ட மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளன.
தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மணல் அகழவினால் குறித்த பிரதேசத்தின் காடுகள் அழிக்கப்படுவதனால் வெள்ள நிலைமைகளின் போது அனர்த்தங்கள் ஏற்படும் என்பதனால் அவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் காவல்துறையுடன் இணைந்து நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர்கள் உத்தியோத்தர்கள் குழுவொன்று இன்று திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்ட போது அங்கு சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்டிருந்தவர்கள் தப்பியோடிய நிலையில் அவர்கள் பயன்படுத்திய உழவு இயந்திரம் மூலம் மணல் குவிக்கும் பெரிய சவல், சாதாரண சவல்கள், மண்வெட்டிகள், கலப்பை, கேபிள் உள்ளிட்ட பொருட்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.