Loading...
தன்னுடைய குரல் பதிவு என்று வெளியான இரண்டாவது பதிவு திரபுபடுத்தப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“எனது தொலைபேசி உரையாடல் எனக் கூறும் இரண்டு குரல் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. முதலாவது குரல் பதிவுக்கும் இரண்டாவது குரல் பதிவுக்கும் இடையில் காணப்படும் உரையாடலின் தன்மையை பாருங்கள்.
Loading...
இரண்டாவது குரல் பதிவு என வெளியிடப்பட்டுள்ள குரல் பதிவை திரிபுப்படுத்தி, தொகுத்து வெளியிட்டுள்ளனர்.
நாட்டின் பிரதான பிரச்சினைகளை மூடி மறைக்க இந்த குரல் பதிவுகளை பயன்படுத்தி வருகின்றனர். முடிந்தால், உண்மையான குரல் பதிவை பகிரங்கப்படுத்துமாறு சவால் விடுக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
Loading...