அவர்கள் என்னை வாகனத்தில் ஏற்றி நாங்கள் போகவேண்டும் என்றார்கள் நான் அவர்களிடம் நீங்கள் யார் என கேட்டேன் அவர்கள் அதற்கு நீ இன்று விளையாடுகின்ற போட்டிக்காக உன்னை அழைத்துச்செல்ல வந்திருக்கின்றோம் என தெரிவித்தனர் என அஸ்வின் நினைகூர்ந்துள்ளார்.

அவர்களிற்கு நடுவில் என்னை அமரச்செய்தனர், என்னை அழைத்துக்கொண்டு சென்று சிற்றூண்டிகள் தேநீர் வாங்கிதந்தனர் எனவும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

நான் அவர்களை போட்டி ஆரம்பமாகப்போகின்றது போகவிடுங்கள் என கேட்டேன் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர்கள் நாங்கள் எதிரணியை சேர்ந்தவர்கள் நாங்கள் உன்னை போகவிடமாட்டோம்,நீ போக விரும்பினால் உனது விரல்களை துண்டிப்போம் எனவும் தெரிவித்தனர் என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

நான் அவர்களை பார்த்து சரி என்பது முகத்தை ஆட்டினேன் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

அவர்கள் எனக்கு அதன் பின்னரும் தேநீர் வழங்கினார்கள் நான் அவர்களிடம் நான் வீட்டிற்கு செல்லவேண்டும் நிச்சயமாக  கிரிக்கெட் விளையாட செல்லமாட்டேன் என தெரிவித்தேன் அதன் பின்னர்அவர்கள்என்னை வீட்டிற்கு கொண்டு சென்றுவிட்டனர் என அஸ்வின்  அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார்.