30 வருடங்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த ஹான்ஸ்லெட்-7214 (HUNSLET – 7214) எனும் லொக்கோமோட்டிவ் புகையிரத இயந்திரம் புத்துயிர் பெற்று சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் காங்சேன்துறை சீமெந்து தொழிற்சாலையில் குரித்த புகையிரதம் கைவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த HUNSLET – 7214 லோகோமோட்டிவ் புகையிரத இயந்திரம் புத்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு insee cement factory railway yard இல் திருத்தம் செய்யப்பட்டு முப்பது ஆண்டுகளுக்கு பிறகு இயங்கு நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் மீளவும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
அத்துடன் இலங்கையில் கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இவ்வாறு கைவிடப்பட்ட வேறு எந்த லொக்கோமொட்டில் புகையிரத இயந்திரமும் இல்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று தென்னிலங்கையில் கிக்கடுவ பிரதேசத்தில் சுனாமி ஆழிப்பேரலை காரணமாக சிக்கி சேதமடைந்த புகையிரத இயந்திரம் திருத்தம் செய்து நான்கு வருடங்களில் பின் சுனாமி தினத்தில் மீள சேவையில் ஈடுபடுத்திய நிகழ்வு பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.