ஏறாவூர் பகுதி தேவாலயத்தில் பலூன் ஊதி விளையாடிய சிறுவன் திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்தான். சம்பவம் தொடர்பான உடற் கூற்றுப் பரிசோதனை கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.
பலூன் வெடித்துச் சிதறி சுவாசக் குழாயில் அடைத்ததாதால் சிறுவன் உயிரிழந்துள்ளார். ஏறாவூர் பகுதி தேவாலயத்தில் பலூன் ஊதி விளையாடிய சிறுவன் திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்தான்.
சம்பவம் தொடர்பான உடற் கூற்றுப் பரிசோதனை கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.
குறித்த சிறுவன் ஊதிய வெடித்துச் சிதறி பலூனின் இறப்பர் துண்டுகள் சிறுவனின் சுவாசக் குழாயை இறுக அடைத்துக் கொண்டதால் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறி மரணித்துள்ளான் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி (Consultant Judicial Medical Officer) ஸ்ரீராம் ஜெயக்கொடி மேற்கொண்ட உடற் கூற்றுப் பரிசோதனையின் மூலம் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தளவாய்க் கிராமத்தில் சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிறு அதிகாலை வரை புத்தாண்டுப் பிறப்புக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
இதன் போது, பலூன் ஊதி விளையாடிக் கொண்டிருந்த 11 வயது தயாகரன் மதுஷான் என்ற சிறுவன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணியளவில் திடீரென மயங்கி விழுந்து மர்மமாக மரணித்திருந்தான்.
உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சிறுவன் அனுமதிக்கப்பட்ட போதும் சிறுவன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு உடற் கூற்றுப் பரிசோதனை இடம்பெற்றது.
இதன் போது சிறுவனின் மர்ம மரணத்திற்கான காரணம் கண்டறியப்பட்டது. விசாரணைகளின் பின்னர் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பெற்றோர்களே கொஞ்சம் அவதானமாக இருப்பது பொருத்தமானது… முடியுமானவரை சிறுவர்களை பலூன் ஊதுவதிலிருந்து தவிர்த்துக்கொள்ளுங்கள்!