கேப்பாப்புலவு கிராமத்தினை இராணுவத்தினர் முழுமையாக விடுவிக்க வேண்டும். எமது பூர்வீக நிலங்கள் மீளவும் எங்களிடம் கையளிக்கப்பட வேண்டும். இதற்காகவே நாம் நல்லாட்சி அரசாங்கத்துக்கு வாக்களித்துள்ளோம். என கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.
இராணுவ முகாம்களை அகற்றி கேப்பாப்புலவு கிராமத்தினை முழுமையாக விடுவிக்க வேண்டும், கல்வி தொடர்பான விடயங்கள் மற்றும் பிரதான வீதிகள் புனரமைத்தல் மின்சார வசதிகளை பெற்றுக்கொள்ளுதல் போன்ற பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயங்கள் தொடர்பாக கேப்பாப்புலவு கிராம அபிவிருத்தி சங்கத்தலைவரிடம் வினவியபோது..
2009ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த பொதுமக்களின் கேப்பாப்புலவு கிராமத்தினை இராணுவத்தினர் முழுமையாகக் கைப்பற்றி தமது நலன் கருதி இராணுவ முகாம்களை அமைத்துள்ளனர்.
2010 ஆம் ஆண்டுக்கு பின்பு மீள்குடியேற்றத்தின் பேரில் சூரிபுரம் எனும் அயல் கிராம வெளியில் மீண்டும் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களின் பூர்வீக நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதுடன் பிரதான வீதிகள் புனரமைக்கப்பட வேண்டும் மின்சார வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் இது போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.