பிரான்ஸ் நாட்டில் தற்போது குளிர்காலத்தில் ஏற்பட்டுள்ள புயல் மற்றும் அதிக காற்றின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் முழுவதும் முக்கியமாக வடக்கு பிரான்ஸில் ஒரு மணி நேரத்திற்கு 146கி.மி அளவு பலத்த காற்று வீசி வருவதால் அந்நாட்டில் 237,000க்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக Normandy பகுதியில், 70,000 வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
இந்த நிலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இந்த பலத்த புயல் காற்றால் சாலைகளில் மரங்கள் அதிகளவில் விழுந்துள்ளன. பொது போக்குவரத்துகள் அதிலும் முக்கியமாக இரயில் போக்குவரத்து பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
பலர் வீடுகளை இழந்துள்ளதால் இரயில் நிலையத்தில் நிற்கும் இரயில்களில் இரவு தங்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தியுள்ள அரசு, இந்த புயல் காற்றால் 46 பேர் காயமடைந்துள்ளதாகவும் உயிரிழப்புகள் ஏதும் ஏற்ப்படவில்லை எனவும் கூறியுள்ளது.