Loading...
களுத்துறை – வஸ்கடுவ சந்திக்கு அருகிலுள்ள கடற்கரையில் இன்று புதன்கிழமை காலை உயிரிழந்த கடலாமையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
50 கிலோ கிராம் எடைகொண்ட இந்தக் கடலாமையின் உடலை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் எடுத்துச்சென்றுள்ளனர்.
Loading...
இதேவேளை மொரட்டுவ – அங்குலான கடற்கரையில் டொல்பினின் உடலை ஒத்த உயிரினம் ஒன்றின் உடற்பாகங்கள் நேற்று கரையொதுங்கியிருந்தன.
இந்த நிலையில் குறித்த உயிரினம் ஒரு பாலூட்டியாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக அத்திடிய வனஜீவராசி பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
Loading...