குளியாப்பிட்டிய பிரதேசத்தில் 73 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் அவர்களில் 43 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் குளியாப்பிட்டிய எலதலவ பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும், இந்த நாட்களில் எலதலவ பிரதேசத்தில் அபாய நிலை காணப்படுவதாகவும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களில், அம்பவ மற்றும் எலதலவ போன்ற பகுதிகளில் ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் நூற்றுக்கு சுமார் 72 சதவீதமானோர் தடுப்பூசிகளின் இரு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இரு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்கள் உட்பட அனைவரும் சரியான முறையில் சுகாதார வழிக்காட்டிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை சுகாதார வழிக்காட்டிகளை தவிர்க்கும் பட்சத்தில் எதிர்காலத் தில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் சுகாதார பிரிவு எச்சரித்துள்ளது.