Loading...
யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வசாவிளான் பகுதியில் கசிப்புடன் ஒருவர் இன்றையதினம்(15.02.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது ஆயிரத்து ஐந்நூறு மில்லிலீட்டர் கசிப்புடன் 45 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கை
குறித்த சந்தேகநபர் வீதியால் கசிப்பினை கொண்டு சென்ற போது காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
Loading...
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பலாலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...