Loading...
நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் சிறைச்சாலைகளில் இருந்து ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் அடிப்படையில் 600 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
இந்நிலையில், யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 22 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக யாழ். சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Loading...
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட 22 கைதிகள் நாளை காலை 9.15 க்கு விடுதலை செய்யப்படவுள்ளதாக யாழ்ப்பாண சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விடுதலை செய்யப்படவுள்ள கைதிகள் சிறு குற்றங்கள் புரிந்து நீதிமன்றங்களில் தண்ட பணம் செலுத்தாத குற்றச்சாட்டுகளால் சிறையில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...