Loading...
இலங்கை அரசாங்கமும் இந்திய நிறுவனம் ஒன்றும் இணைந்து மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அந்த நிறுவனத்துடனான கூட்டு செயற்பாடு வெற்றியளிக்கும் பட்சத்தில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
அத்துடன் இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய எதிர்பார்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
Loading...