Loading...
பொலன்னறுவை வெலிகந்த பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து கொலை செய்யப்பட்ட பெண்ணொருவரின் உடலம் காவற்துறையால் இன்று மதியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெலிகந்த மகாவலிதென்ன கிராமத்தை சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவரின் மூன்று பிள்ளைகளும் பண்டிகை கொண்டாட்டமொன்றில் கலந்து கொள்ள சென்றிருந்த சமயம் இவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Loading...
குறித்த பெண்ணின் தலைக்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இந்த கொலை இடம்பெற்றிருக்க கூடும் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
வெலிகந்த காவற்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Loading...