Loading...
யாழ்ப்பாண மாவட்டம் மருதங்கேணிப் பிரதேசத்தில் வேலையற்ற பட்டதாரிமீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாகவும், குறித்த வேலையற்ற பட்டதாரி மருதங்கேணியில் புடவைக் கடை நடாத்தி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
Loading...
தவராசா நிமல்ராஜ் என்ற வேலையற்ற பட்டதாரியே சம்பவத்தில் காயமடைந்ததாகவும், சம்பவம் தொடர்பாக பளை காவல்துறையினருக்கு அறிவித்தபோதிலும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக 119என்ற அவசர இலக்கத்துக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்தே காவல்துறையினர் வருகை தந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...