தனது இறப்பை ஒளிப்பதிவாக வெளியிட்டு மைலாம்பாவெளியில் கடந்த சனிக் கிழமை குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை!
மட்டக்களப்பில் கைதொலைபேசியை குறைந்த கட்டணத்தில் மாதந்த வட்டியுடன் கொடுப்பது அதிகரித்தவுடன் சிறுவர் தொடங்கி முதியோர் வரை கைத்தொலைபேசியுடனும் ஒளிப்பதிவு எடுக்கும் வீதமும் அதிகரித்துவிட்டது.
ஒரு பக்கம் தற்கொலை வீதம் கிராம புறங்களில் விகிதம் கூடியநிலையில் தமது இறப்பை பலர் ஒளிப்பதிவாக வெளியிட்டு மற்றவர் மனங்களை துன்புறுத்துதல் கவரும் நிலை வந்துள்ளது.இதில் இளம்பெண்கள் இவ்மோகத்தில் கட்டுண்டு உள்ளார்கள்.பல முகநூல் பைத்தியங்களும் உலாவுகின்றது.
அண்ணண் தந்தை தாய் கஸ்டப்பட்டு மத்திய கிழக்கு நாடுகள் சென்று அனுப்பும் பணத்தில் அவர்கள் மீண்டும் இலங்கை வந்து புதுத்தொழில் தொடங்க பணம் சேமித்து வைக்காமலும் ஒழுங்கான மழைக்கு தாக்கு பிடிக்கும் வீடு கட்டாமல் அதிக கிராமத்தினர் அதிவிலை கூடிய சல்வார், கைத்தொலைபேசி வாங்கி அனுபவித்துக்கொண்டு இயற்கை அனர்த்தங்களில் பாதிப்புறும் போது அரசியல்வாதிகளை குறைகூறும் நிலை அதிகரித்துவிட்டது.
தொடர்ந்து தனது மகனை பார்த்துக்கொண்டு வந்த தந்தையால் தனது மகன் ஒரு சுமை என முடிவு எடுத்து தற்கொலை செய்துள்ளார் இவர்களை போன்று தந்தை முடிவு எடுப்பதற்கு எமது தமிழரின் பலவீனமான மனநிலைதான் இப்படி துன்பியல் முடிவுகளை எடுக்க தூண்டுகின்றது.
இவரது மரணம் சம்மந்தமாக ஏறாவூர் மரண விசாரணை அதிகாரி திரு. நசீர் தெரிவித்த தகவல்!
நாகராசாப்போடி கிருபானந்தம் (36) என்ற இரு பிள்ளைகளின் தந்தை கடந்த சனிக் கிழமை பகல் மைலம்பாவெளியில் தூக்கிட்டு தற்கொலை.
வேளான்மை வெட்டு மெசின், JCB இயந்திரம் போன்றவற்றை வாடகைக்கு பெற்றுக்கொடுக்கும் தொழில்புரிந்து வந்த இவருக்கு, இவரது நான்கரை வயது மனுக்கு மூன்று வயதில் ஏற்பட்ட மூளைக்காய்ச்சலினால் கால்கள் செயழிலந்தும், வாய் பேசமுடியாமலும் போனதால் தான் உழைக்கும் பணத்தின் பெரும்பகுதியை மகனுக்காகவே செலவு செய்து வந்த இவர்,
“சனிக் கிழமை (15/04/2017) பிற்பகல் தனது ரக கைத்தொலைபேசியில் 03.06 க்கு
நான் சாராயம் குடித்துள்ளேன், சாகப்போகிறேன்,என்னுடைய பிள்ளைகளை பார்த்துக்கொள், பிள்ளைக்கு செலவு செய்து என்னால முடியல்ல போன்ற விடயங்களை பேசி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
சம்பவ இடத்துக்கு கடந்த சனிக் கிழமை இரவு 07.00 மணிக்கு ஏறாவூர் பொலிசார், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பிவைத்துவிட்டு ஞாயிறு காலை வைத்தியசாலை சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.