யாழ்ப்பாணத்தில் இரண்டு பதின்ம வயது சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 20 வயதுடைய காமுகன் ஒருவன் யாழ்ப்பாண பொலிசாரால் இன்று (25.04.2017) கைது செய்யப்பட்டுள்ளார்.
மலையகத்தின் நாவலப்பிட்டி பகுதியை சொந்த இடமாக கொண்ட பெரும்பான்மை இனத்தை சேர்ந்த இந்த நபர் வசந்தபுரம், அராலி வீதி, யாழ்ப்பாணத்தில் தன்னுடைய தமையனாரின் வீட்டில் தங்கியிருந்து இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் அவ்வேளையிலேயே அப்பகுதியியை சேர்ந்த சிறுமியொருவரை வல்லுறவுக்குட்படுத்தியதாகவும் இச்சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு முறையிட்டதை தொடர்ந்து பொலிசார் விசாரணைக்காக இவரது வீட்டுக்கு சென்றபோது அந்த நபர் இன்னொரு சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்தமையும் தெரியவந்துள்ளது. இவரை மே மாதம் 08ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
யாழில் சிறுமிகளை பாலியல்வல்லுறவு புரிந்து வந்த காமுகன் கைது.
Loading...
Loading...
Loading...