பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின்போது இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஊடாக நாட்டின் ஒரு பகுதி இந்தியாவுக்கு ஒப்படைக்கப்படுகின்றது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் இந்தியப் பயணம் குறித்து கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு இன்றைய தினம் கருத்து வெளியிடும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இப்போது இந்த அரசால் நாடு விற்கப்படும் விதத்தைப் பாருங்கள். இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் மற்றும் துறைமுகம் போன்றவை இந்தியாவுக்குக் கொடுக்கப்படுகின்றன. இதனூடாக நாட்டின் ஒரு பகுதி இந்தியாவிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கட்டுகின்றது.
இந்தத் திட்டத்தை அமைச்சர்கள் பலரும் எதிர்த்துள்ளனர். நாம் நடத்தும் மே தினக் கூட்டத்தில் இதற்கான பாரிய எதிர்ப்பை மக்கள் வெளிப்படுத்துவார்கள்.
ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த பலரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். வரலாற்றில் பதியப்படும் மே தினக் கூட்டமாக இந்தக் கூட்டம் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.