Loading...
அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையில் ஸ்தாபிக்கப்பட உள்ள பாதுகாப்பு பிரிவில் அமைச்சர் சாகல ரத்நாயக்கவையும் உள்ளடக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க யோசனை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவசரமான நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தவும் பொன்சேகா தலைமையில் விசேட பாதுகாப்பு பிரிவை ஏற்படுத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக பேசப்படுகிறது.
Loading...
அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், பணிப்புறக்கணிப்புகள் ஆகியவற்றை எதிர்கொள்ள அரசாங்கம் உரிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட போதே பிரதமர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்
Loading...