மக்கள் அபிலாஷைகளையும், அடிப்படை உரிமைகளையும் வென்றெடுக்க தவறும் தமிழ் அரசியல்வாதிகளை நீக்குவோம் என வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மே தின எழுச்சி பேரணியும் பொதுக் கூட்டமும் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.
இலங்கை ஆசிரியர் சங்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம், தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையம், பல்கலைக்கழக ஊழியர் சங்கம் உள்ளிட்ட ஆறு அமைப்புக்கள் ஒன்றிணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து மே தின எழுச்சி பேரணியானது, கலட்டி புகையிரத வீதி வழியாக பலாலி வீதியை சென்றடைந்து, அங்கிருந்து இராமநாதன் வீதி வழியாக மீண்டும் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தை வந்தடைந்ததுடன், பொதுக்கூட்டம் இடம்பெற்றது.
அதன்போது, சமஷ்டி அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண குரல்கொடுப்போம். இவை இல்லாத அரசியல் தீர்;வை நிராகரிப்போம், அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்திற்கு உடனடி தீர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.