கணவனைக் கடத்திச் சென்ற 30 வயதுப் பெண்ணை வீடு தேடிச் சென்று கத்தியால் வெட்டிக் காயப்படுத்தினார் 26 வயது இளம் குடும்பப் பெண்.
இந்தச் சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனா்.
கடந்த வெள்ளிக்கிழமை 30 வயதுப் பெண்ணையும் அவரது இரண்டரை வயதுச் சிறுவனையும் கத்தியால் வெட்டிக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக, 26 வயது இளம் பெண் தனது இரண்டு மாதக் குழந்தையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
தலையில் வெட்டுக் காயத்துக்கு இலக்கான தாயும் மகனும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சோ்க்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனது கணவனைக் கடத்திச் சென்ற பெண்ணையே இவா் வெட்டினார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பெண்ணை பொலிஸார் நேற்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிவான் குறித்த பெண்ணை 25 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆள்பிணையில் செல்ல அனுமதித்தார்.
கணவனைக் கடத்திய பெண்ணை தேடிச் சென்று வெட்டிய மனைவி – சாவகச்சேரிப் பகுதியில் சம்பவம்
Loading...
Loading...
Loading...